கொல்கத்தாவில் கரோனாவுக்கு 24 வயது இளைஞர் பலி!
மேற்கு வங்கத்தில் இந்தாண்டு கரோனாவுக்கு மூன்றாவது மரணம் இது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாகொல்கத்தாவில் கரோனாவுக்கு 24 வயது இளைஞர் பலி!
மேற்கு வங்கத்தில் இந்தாண்டு கரோனாவுக்கு மூன்றாவது மரணம் இது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் கரோனா பாதித்து 24 வயதுள்ள இளைஞர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டையே உலுக்கிஎடுத்த கரோனா தொற்று தற்போது சற்று ஓய்ந்த நிலையில், கொல்கத்தாவில் 24 வயது இளைஞர் உயிரிழந்திருப்பது மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் இந்தாண்டு கரோனாவுக்கு மூன்றாவது மரணம் இது என்று சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இறந்தவர் ஆஷிஷ் ஹஸ்ரா என்று அடையாளம் காணப்பட்டவர், மூச்சுத் திணறல் காரணமாக தேசிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மூளைக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது, பின்னர் கரோனா சோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் பெலியாகட்டா ஐடி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கிய நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் காலமானார்.
ஹஸ்ராவின் உடல் கொல்கத்தா முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது, அதன் பிறகு திங்கள்கிழமை மாலை கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி அவரது இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.
கடந்த ஜனவரியில் நகரத்தில் ஒருவரும், மற்றொன்று வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராசத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.