அமேதி: ஓடும் ரயிலில் இருந்து விழுந்த இளைஞர் பலி
அமேதியில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த இளைஞர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமேதியில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த இளைஞர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், ஆலம்பூர் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் குமார்(35), தனது மனைவியுடன் ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலில் கௌரிகஞ்சில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தார்.
அப்போது தினேஷ் குமார் ரயிலில் கதவின் அருகே நின்று பயணம் செய்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் பாபுகஞ்ச் ஐந்தி அருகே வேகமாக சென்றுகொண்டிருந்தபோது ரயிலில் இருந்து அவர் திடீரென கிழே விழுந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தினேஷ் குமார் நிகழ்விடத்திலேயே பலியானார். லக்னௌவின் வாரணாசி ரயில் பிரிவில் இந்த சம்பவம் நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
உடல் மீட்கப்பட்டு கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மேலும் சட்ட நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும் கௌரிகஞ்ச் காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.
A 35-year-old man died after falling from a moving train in the Gauriganj area of Amethi district on Friday, police said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.