இந்தியா

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் நேர்ந்த சோகம்

DIN

ஜெய்ப்பூர்: பாதசாரிகள் இருவர் மீது மோதிய கார், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேனில் மோதி விபத்துக்குள்ளானது.

காரில் ஓட்டுநர் உள்பட நால்வர் பயணித்துள்ளனர். அதில் ஒருவர் விபத்து ஏற்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக நண்பர்களுடன் காரில் அமர்ந்து மது அருந்துவதை விடியோவாக எடுத்துசமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரிலிருந்து பார்மர் நோக்கி செல்லும்போது விபத்து நடந்திருக்கிறது.

காவலர்கள் சோதனை சாவடியில் நிறுத்த முயன்றபோது ஓட்டுநர் காரை நிறுத்தாமல் சென்றுள்ளார்.

அதிவேகமாக சென்ற கார் பாதசாரிகள் இருவர் மீது மோதி சாலையோரம் நிறுத்தியிருந்த வேனில் மோதியது.

சாலையோரத்தில் நின்றிருந்த பெண்ணும் அவரது மகன் மனீஷ் ஆகிய இருவரும் கார் மோதியதால் உயிரிழந்துள்ளனர். காரில் இருந்த நான்கு பேரில் இருவர் பலியாகியுள்ளனர்.

மதுவால் நேர்ந்த விபத்துக்குக் காரணமான ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரைக் கைது செய்துள்ளதாகவும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீராக் காதல்! ஜான்வி கபூர்..

கடைசி டி20: பாகிஸ்தானுக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!

சபரிமலை கோயில் நடை திறப்பு!

முகூர்த்தம், வார விடுமுறை நாள்கள்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை: தெலுங்கு தேசம் வேட்பாளர் மீது தாக்குதல்!

SCROLL FOR NEXT