நடிகர் யஷ்க்கு கட்அவுட் வைத்தபோது மின்சாரம் தாக்கி 3 பேர் பலி
கர்நாடகத்தில் நடிகர் யஷ்க்கு கட்அவும் வைத்தபோது மின்சாரம் தாக்கி 3 பேர் பலியானார்கள்.
கர்நாடகத்தில் நடிகர் யஷ்க்கு கட்அவும் வைத்தபோது மின்சாரம் தாக்கி 3 பேர் பலியானார்கள்.
கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்திருப்பவர் நடிகர் யஷ். இவரது பிறந்தாளை முன்னிட்டு ரசிகர்கள், 25 அடி உயர கட்அவுட்டை கடக் மாவட்டத்தில் நேற்றிரவு வைத்தனர்.
அப்போது மின்சாரம் தாக்கியதில் ஹனுமந்த, முரளி நடவினமணி, நவீன் ஆகியோர் பலியாகினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
Advertisement
உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் யஷ் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் யஷ் இன்று தனது 38வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.