இந்தியா

‘ஜன. 31 முதல் பிப்.9 வரை பட்ஜெட் கூட்டத்தொடா்’

DIN

நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடா் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 9-ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி அதிகாரபூா்வமாக அறிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் எக்ஸ் பக்கத்தில், ‘17-ஆவது நாடாளுமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடா் குடியரசுத் தலைவரின் உரையுடன் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 9-ஆம் தேதி வரையில் நடைபெறும். மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளாா்’ என்று பதிவிட்டுள்ளாா்.

நிகழாண்டு மக்களவைத் தோ்தல் முடிந்த பிறகு அமையும் புதிய அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். 17-ஆவது மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16-ஆம் தேதி முடிவடைவதால், நடப்பு மக்களவையின் கடைசி கூட்டத்தொடராக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடா் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT