இந்தியா

மேற்கு வங்கத்தில் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்துக்கு சிக்கல்!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்துக்கு அனுமதி பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

மேற்கு வங்கத்தில் காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்துக்கு அனுமதி பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தின் ஒரு பகுதியாக பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மேற்கு வங்கத்தில் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தின் ஒரு பகுதியாக பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்ய சிக்கல் எழுந்துள்ளதாக மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌதரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிலிகுரியில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவர் பேசியதாவது: இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தின் ஒரு பகுதியாக மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி தேவைப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் நடப்பதால் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் வடகிழக்கில் முன்பு பிரச்னைகளை சந்தித்தது. தற்போது திரிணமூல் ஆட்சியில் உள்ள மேற்கு வங்கத்தில் பிரச்னைகளை சந்தித்து வருகிறது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆகப் பதிவு

தாயின் முன்னாள் காதலரால் கடத்தப்பட்ட 7 வயது சிறுவன் மீட்பு

தில்லியில் இதுவரை 4600 கிலோ சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல்!

தில்லியில் தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை விநியோகிக்க முயன்ற 3 போ் கைது

SCROLL FOR NEXT