ஆஎஸ்எஸ், பாஜக நாட்டில் வன்முறையைப் பரப்புகின்றன 
இந்தியா

ஆஎஸ்எஸ், பாஜக நாட்டில் வன்முறையைப் பரப்புகின்றன: ராகுல்

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் சிந்தனைகள் நாட்டில் வன்முறையையும், வெறுப்பையும் பரப்பி வருவதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

DIN

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் சிந்தனைகள் நாட்டில் வன்முறையையும், வெறுப்பையும் பரப்பி வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

நாட்டில் கிழக்கில் இருந்து மேற்காக 6,713 கி.மீ. தொலைவுக்கு ராகுல் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மணிப்பூரில் இருந்து கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய இப்பயணம், மேற்கு வங்கத்தை கடந்த 25-ஆம் தேதி எட்டியது.

2 நாள்கள் ஓய்வுக்குப் பிறகு இம்மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் தனது பயணத்தை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கினார் ராகுல்.

ஞாயிற்றுக்கிழமை சிலிகுரி அருகே நிறைவடைந்த அவரது பயணம், திங்கள்கிழமை கிஷன்கஞ்ச் வழியாக பிகாா் மாநிலத்துக்குள் நுழைந்தது.

அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பல்வேறு மதங்கள் மற்றும் சாதிகளைச் சேர்ந்தவர்கள் போராடி வருகின்றனர். 

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் சிந்தனைகள் நாட்டில் வன்முறையையும் வெறுப்பையும் பரப்பி வருகின்றன என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று!

இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

நாடாளுமன்றத்துக்கு ரூ.14 கோடியில் நவீன பாதுகாப்பு

கூட்டுறவு வங்கியில் உதவியாளா் காலிப் பணியிட எண்ணிக்கை குறைப்பு

திருவண்ணாமலை: மலையைச் சுற்றியுள்ள 554 ஏக்கரை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும்

SCROLL FOR NEXT