இந்தியா

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்வதாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

DIN

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்வதாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

கடந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது, அவைகளின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக மக்களவையின் 100 எதிர்க்கட்சி உறுப்பினர்களும், மாநிலங்களவையின் 46 எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இடைநீக்கம் செய்து அவைத் தலைவர்கள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், நாளைமுதல் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதால் அனைத்து எம்பிக்களின் இடைநீக்கத்தையும் ரத்து செய்ய அரசின் சார்பாக அவைத் தலைவர்களுக்கு பரிந்துரைத்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

மேலும், எம்.பி.க்கள் உறுப்பினர்களாக இருக்கும் நாடாளுமன்றக் குழுக்களிலும் அவர்களது இடைநீக்கம் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

மக்களவை பாதுகாப்பை மீறி உள்ளே நுழைந்து இருவர் புகைக் குப்பிகளை வீசிய விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க கோரி  எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT