ஹைதராபாத்: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
தேசத் தந்தை காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட முஸி ஆற்று கரையில் அமைந்துள்ள பாபு காட் பகுதிக்கு சென்று மலரஞ்சலி செலுத்தினார் ரேவந்த் ரெட்டி.
காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட 11 நகரங்களில் ஹைதராபாத்தும் ஒன்று. இங்கு காந்தியின் அருங்காட்சியகமும் அமைந்துள்ளது.
இதையும் படிக்க: காந்தி நினைவு நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் மலர் தூவி மரியாதை
முதல்வர் உடன் எம்எல்ஏ மகேஷ் குமார், தலைமை செயலர் ஆ சாந்தி குமார், டிஜிபி ரவி குப்தா ஆகியோர் காந்தியின் நினைவிடத்திற்கு சென்றனர்.