கடமை தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!
மகாராஷ்டிரத்தில் பணியில் அலட்சியமாக இருந்ததாக இரு வருவாய்த்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்
மகாராஷ்டிரத்தில் பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி இரு வருவாய்த்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரத்தின் பீட் மாவட்டத்தில் மணல்கொள்ளை நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை செய்தபோது, மணல்கொள்ளை நடப்பது உறுதியானது.
இதனையடுத்து, மணல்கொள்ளையை கண்டுகொள்ளாமல், அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படும் வருவாய்த்துறை அதிகாரிகளான சுதாகர் அந்தலே மற்றும் கிரண் பிரபாகர் தந்தே ஆகிய இருவரையும் பணி இடைநீக்கம் செய்து, பீட் மாவட்ட ஆட்சியர் அவினாஷ் பதக் உத்தரவிட்டுள்ளார்.