தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் இதுவரை 4.66 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளனர்.
வருடாந்திர அமர்நாத் யாத்திரை ஜூன் 29-ம் தேதி தொடங்கியுள்ள நிலையில், குகைக் கோயிலைத் தரிசிக்க 1,477 பேர் அடங்கிய புதிய குழு ஜம்முவில் உள்ள பகவதி நகர் யாத்திரி நிவாஸில் இருந்து 2 துணை வாகனங்களில் இன்று அதிகாலை புறப்பட்டுச் சென்றது.
வடக்கு காஷ்மீர் பால்டால் அடிப்படை முகாமிலிருந்து அதிகாலை 3.25 மணிக்கு 377 பக்தர்களை 13 வாகனங்களில் பாதுகாப்புப் படையுடன் சென்றனர். தெற்கு காஷ்மீர் நுன்வான் (பஹல்காம்) அடிப்படை முகாமிலிருந்து 1,100 பக்தர்கள் 39 வாகனங்களின் இரண்டாவது துணைக் குழுவும் புறப்பட்டது.
பாதுகாப்புப் படைகள் மற்றும் காவல்துறையின் பாதுகாப்புக்கு மத்தியில் இந்தாண்டு யாத்திரை அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெற்று வருகின்றது.
காஷ்மீர் இமயமலையில் கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த குகைக் கோயிலில் 52 நாள்கள் நடைபெறும் யாத்திரை ஆகஸ்ட் 19ஆம் தேதி நிறைவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.