ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!
அமர்நாத் யாத்திரை தொடங்கும் தேதியை ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார்.
அமர்நாத் யாத்திரை தொடங்கும் தேதியை ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார்.
இமயமலையில் சிவபெருமானின் அமர்நாத் குகைக் கோயில் அமைந்துள்ளது. இந்த குகைக்கோயிலில் இயற்கையாகத் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாள்களுக்கு மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், நடப்பாண்டுக்கான அமர்நாத் யாத்திரை தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 3-ம் தேதி முதல் அமர்நாத் யாத்திரை தொடங்குவதாக ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார். ஜூன் 3 முதல் ஆகஸ்ட் 28 வரை மொத்தம் 57 நாள்கள் இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. ஆன்லைன் மூலமாக பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். 13 முதல் 70 வரையிலான பக்தர்கள் அமர்நாத் யாத்திரை செல்ல அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.