முகப்பு
இந்தியா

கொண்டாட்டத்துக்கு தயாராகும் காங்கிரஸ் அலுவலகம்!

தில்லி காங்கிரஸ் அலுவலகத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரம்.

Updated On : 3 ஜூன், 2024 at 10:02 AM
பகிர்:

மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ஆம் தேதி நிறைவுபெற்றது.

நாளை(ஜூன் 4) அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை பணி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்று ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் உறுதியாகவுள்ள நிலையில், கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர்.

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை விமர்சித்த ராகுல் காந்தி, கருத்துக்கணிப்பு அல்ல, மோடியின் கற்பனை கணிப்பு எனத் தெரிவித்திருந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →