மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு, திபெத்திய பௌத்த மத தலைவர் தலாய் லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடிக்கு தலாய் லாமா எழுதியுள்ள கடிதத்தில், “நீங்கள்(பிரதமர் மோடி) மீண்டும் பதவியேற்கத் தயாராகும் போது, இந்த மாபெரும் தேசத்தின் மக்களின் நம்பிக்கைகளை நிறைவேற்றுவதில் உங்கள் முன்னால் இருக்கும் சவால்களை எதிர்கொள்வதில் நீங்கள் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியாவை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. இந்திய மக்கள் தங்கள் ஜனநாயகத்தை எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்பதை இந்தத் தேர்தல்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்தச் சந்தர்ப்பத்திலும், இந்திய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும், அவர்களின் அன்பான விருந்தோம்பலுக்கும் திபெத்திய மக்களின் சார்பாக நன்றி சொல்ல விரும்புகிறேன்.
இந்தியாவின் தாராள மனப்பான்மை, கருணை காரணமாக, நமது பண்டைய கலாசார பாரம்பரியத்தை, அமைதியாகவும், சுதந்திரமாகவும் பாதுகாக்க முடிந்தது. புதிய தலைமுறை இந்திய சகோதர - சகோதரிகளின் பண்டைய இந்திய ஞானத்தின் மீது அதிக விழிப்புணர்வு மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்துவதில் நாங்கள் மிகவும் வெற்றியடைந்துள்ளோம்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.