முகப்பு
இந்தியா

சிபிஐ 'மெத்தன' விசாரணையால் ஊழல் வழக்கில் 9 குற்றவாளிகள் விடுதலை

சிபிஐ 'மெத்தனத்தால்' 9 குற்றவாளிகளை விடுவித்தது நீதிமன்றம்

Updated On : 11 ஜூன், 2024 at 11:07 AM
பகிர்:

புது தில்லி: ஒரு நிறுவன மற்றும் நான்கு வங்கி அதிகாரிகள் உள்பட 9 பேர் மீது ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட ஊழல் வழக்கில், சிபிஐயின் மெத்தனமான விசாரணையை காரணம் காட்டி, தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு கனரா வங்கியில் ரூ.4.8 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில், 2015ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.

இந்த வழக்கில், ஜூன் 3 ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில், அரசு ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு நீதிமன்றத்துக்கு உரிய ஆதாரங்களுடன் கொண்டு வரத் தவறிவிட்டது என்றும், அரசு ஊழியர்கள் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கிடையில் சதித் தொடர்பு இருப்பதாக நிரூபிக்கத் தவறிவிட்டது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

வங்கி அதிகாரிகளுடன் சேர்ந்துகொண்டு, ஹர்ப்ரீத் ஃபேஷன் தனியார் நிறவனத்தின் உரிமையாளர்கள் செய்த முறைகேட்டினை முறைப்படி சிபிஐ நிரூபிக்கவில்லை.

வங்கியால் கொடுக்கப்பட்ட கடன்தொகை 47 விதமான காசோலைகள் மூலம், ஹர்ப்ரீத் ஃபேஷன் நிறுவனத்தின் கிளை நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த காசோலைகள் மட்டுமே குற்றச்சாட்டுக்கு ஆதாரமாகிவிட முடியாது. அதனை முறையாக விசாரித்து தகவல்களை சேகரித்திருக்க வேண்டும். வங்கிக் கணக்குகளையோ, வங்கி விவரங்களையோ, வரி செலுத்தியது தொடர்பான தகவல்களையோ சிபிஐ அதிகாரிகள் ஆராய வில்லை. வெறும் காசோலைகளை மட்டும் வைத்து சிபிஐ வழக்குப் பதிவு செய்திருக்கிறது. விசாரணையின்போது வங்கித் தரப்பில் போதுமான ஆவணங்கள் கொடுக்கப்படவில்லை என்று சிபிஐ பொறுப்பட்ட வாதங்களை வைத்துள்ளது. விசாரணையின் மெத்தனத்தால் குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →