இந்தியா

பஞ்சாப் எல்லையில் சீன டிரோன் பறிமுதல்!

இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதி அருகே சந்தேகத்திற்குரிய வகையில் பறந்த டிரோன்..

DIN

இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் சீன டிரோனை பாதுகாப்புப் படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

பஞ்சாபின் தார்ன் தரன் மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதி அருகே சந்தேகத்திற்குரிய வகையில் டிரோன் ஒன்று பறந்து வருவதாக எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியை எல்லை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர சோதனை மேற்கொண்டனர்.

நுர்வாலா என்ற கிராமத்திற்கு அருகே வயல்வெளியில் டிரோன் இருப்பதைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர். அதனை கைப்பற்றி ஆய்வு செய்தபோது அது சீனத்தில் தயாரிக்கப்பட்ட டிரோன் என்று தெரியவந்தது.

முதற்கட்டமாக சீனாவில் தயாரிக்கப்பட்ட டிஜிஐ மேவிக்3 கிளாசிக் டிரோன் என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பஞ்சாப் எல்லையில் வெளிநாட்டு டிரோன்கள் அடிக்கடி பறிமுதல் செய்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுக்கிர தோஷம் நீக்கும் ஸ்ரீரங்கம்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைய பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள்: அமைச்சர் கே.என். நேரு

இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ. 22.20 கோடி அபராதம்: மத்திய அமைச்சர் தகவல்

இப்படியொரு சம்பவம் நடந்தால்... லாக்டவுன் - திரை விமர்சனம்!

விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் நில அதிர்வு!

SCROLL FOR NEXT