நீட் வினாத்தாள் கசிவு: பாட்னாவில் 2 பேரை கைது செய்தது சிபிஐ
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில், பாட்னாவில் 2 பேரை கைது செய்தது சிபிஐ
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில், பாட்னாவில் இரண்டு பேரை கைது செய்துள்ள சிபிஐ அதிகாரிகள் காவலில் வைத்துள்ளனர்.
நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு வினாத்தாள் மற்றும் விடைகளையும் கொடுத்து, அவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கு முன்பு, தங்குமிடம் கொடுத்ததாக, மணீஷ் குமார், அஷுதோஷ் குமார் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்திருக்கிறார்கள்.
நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடு வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்ட பிறகு, முதல் கைது நடவடிக்கையாக அமைந்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஆறு முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்திருக்கும் சிபிஐ, குஜராத், பிகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில்தான், தேர்வு மையமாக இருந்த பள்ளிகளுக்கும், வினாத்தாளைக் கொண்டு சென்ற கொரியர் நிறுவனம், அதனைப் பெற்றுக்கொண்ட அரசு அதிகாரிகள் என அனைவரிடமும் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த மே 5-ஆம் தேதி நாடு முழுவதும் எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான நீட் தோ்வு நடத்தப்பட்டது. அப்போது பிகாா், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு, ஹரியாணாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வு எழுதிய 6 போ் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றது, 1563 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கியது, தேர்வு முடிவு வெளியான நாள் என அனைத்துமே சர்ச்சையாக மாறியது.
இதுதொடா்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய கல்வித் துறை உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து வினாத்தாள் கசிவு, தோ்வில் ஆள்மாறாட்டம், தோ்வா்கள், தோ்வுக்கூட கண்காணிப்பாளா்கள் செய்த மோசடி என குஜராத், ராஜஸ்தான் மற்றும் பிகாரில் காவல் துறையினா் விசாரித்து வந்த வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில்தான் பிகார் மாநிலம் பாட்னாவில் இரண்டு பேரை சிபிஐ இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.