வாரணாசி: இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டி யாகம்!
இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டி யாகம் வளர்த்த ரசிகர்கள்.
டி20 உலகக் கோப்பை அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றுவந்த நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் பார்படாஸ்ஸில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டி உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் இந்திய அணி ரசிகர் யாகம் நடத்தி வழிபாடு செய்தனர்.
யாகம் வளர்த்து பூஜையில் ஈடுபட்ட அவர்கள் விராட் கோலி, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் புகைப்படங்களுடன், இந்திய தேசிய கொடி மற்றும் கிரிக்கெட் பேட் ஆகியவை வைத்து வழிபாடு செய்தனர்.
மேலும், அவர்கள் பாரத் மாதாகி ஜே..! வந்தே மாதரம்..! என்றும் கோஷமிட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “இதுவரை அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்ற நிலையில் கடைசி ஆட்டத்தில் வெற்றிபெறுவது முக்கியமானதாகும். அதனால் தான் யாகம் வளர்த்து வழிபாடு செய்தோம். இந்த யாகத்தினால் அவர்களுக்கு வலிமை, ஆற்றல், சக்தி கிடைக்கும்” என்றனர்.