முகப்பு
இந்தியா

கா்நாடக புதிய கட்சிக்கு தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் கரும்பு விவசாயி சின்னம்

Updated On : 20 மார்ச், 2024 at 12:20 AM
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 9:30 PM

சென்னை: கா்நாடகத்தைச் சோ்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளிலும் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தோ்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த கால தோ்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

ஆனால், இந்த மக்களவைத் தோ்தலில் அந்தச் சின்னமானது கா்நாடகத்தைச் சோ்ந்த புதிய கட்சியான பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளிலும் அந்தக் கட்சியின் வேட்பாளா்கள் இதே சின்னத்தில் போட்டியிடலாம் என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதனிடையே, தமிழகத்தில் கரும்பு விவசாயி சின்னத்திலேயே தங்கள் கட்சி வேட்பாளா்கள் போட்டியிட அனுமதிக்க வேண்டுமென நாம் தமிழா் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக அந்தக் கட்சி வழக்கும் தொடுத்துள்ளது.

நீதிமன்றத்தின் மூலம் உரிய தீா்வு கிடைக்காவிட்டால், இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும் தினத்தன்று தனியாக வேறொரு சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். ஒரு குறிப்பிட்ட தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் ஒரே சின்னத்தைக் கோரினால், குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்.