கோப்புப்படம் 
இந்தியா

தில்லியில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியில் இருந்து வாரணாசிக்கு புறப்படவிருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

DIN

தில்லியில் இருந்து வாரணாசிக்கு புறப்படவிருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று(மே 28) காலை தில்லியில் இருந்து வாரணாசிக்கு புறப்படவிருந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து, பயணிகள் உடனடியாக அவசரகால கதவுகள் வழியாக இறக்கிவிடப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, விமானம் தனி இடத்திற்கு இழுத்து செல்லப்பட்டு, வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் மூலம் சோதனை நடைபெற்று வருகிறது.

விமான நிலைய செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர், விமானம் விரிவான சோதனைக்கு உட்பட்டுள்ளது. அனைத்து பயணிகளும் விபத்து ஏதுமின்றி அவசரகால கதவுகள் வழியாக வெளியேற்றப்பட்டனர்" என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

ரஷியாவுக்கே இந்த நிலையா? எரிபொருள் தட்டுப்பாடு!

மணிப்பூரில் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும்: காங்கிரஸ்

அமெரிக்கா வரி விதிப்பு: மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்-துரை.வைகோ

3 வெண்கலப் பதக்கங்களுடன் நிறைவு செய்த மனு பாக்கர்!

SCROLL FOR NEXT