தில்லியில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
தில்லியில் இருந்து வாரணாசிக்கு புறப்படவிருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தில்லியில் இருந்து வாரணாசிக்கு புறப்படவிருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று(மே 28) காலை தில்லியில் இருந்து வாரணாசிக்கு புறப்படவிருந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து, பயணிகள் உடனடியாக அவசரகால கதவுகள் வழியாக இறக்கிவிடப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, விமானம் தனி இடத்திற்கு இழுத்து செல்லப்பட்டு, வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் மூலம் சோதனை நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
விமான நிலைய செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர், விமானம் விரிவான சோதனைக்கு உட்பட்டுள்ளது. அனைத்து பயணிகளும் விபத்து ஏதுமின்றி அவசரகால கதவுகள் வழியாக வெளியேற்றப்பட்டனர்" என்று தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.