அமானத்துல்லா கான்(கோப்புப்படம்) PTI
இந்தியா

ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானுக்கு ஜாமீன்!

ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானுக்கு எதிரான அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு.

DIN

ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ அமானத்துல்லா கானை ஜாமீனில் விடுவிக்க தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், அவருக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிபதி மறுத்துவிட்டார்.

தில்லி ஓக்லா தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான அமனாத்துல்லா கானுக்கு எதிராக வக்ஃப் வாரிய பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக மத்திய புலனாய்வுத் துறை ஒரு வழக்கையும் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சோ்த்ததாக தில்லி லஞ்ச ஒழிப்புத் துறை ஒரு வழக்கையும் பதிவு செய்துள்ளன.

இந்த வழக்குகளுடன் தொடா்புடைய பணப்பரிவா்த்தனை விவகாரத்தில் ஊழல் செய்த பணத்தை சில குடியிருப்புகள் வாங்கியதில் முதலீடு செய்ததாக புலனாய்வு அமைப்புகள் சந்தேகித்தன. இதையடுத்து, ஓக்லா பகுதியில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை கடந்த செப்டம்பா் மாதம் சோதனை நடத்தினா்.

அதைத் தொடா்ந்து, அவருக்கு எதிராக பணப்பரிவா்த்தனை முறைகேடு தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அமானத்துல்லாவை அமலாக்கத் துறை கைது செய்து முதலாவது துணை குற்றப்பத்திரிகையில் அவரது பெயரையும் சோ்த்தது. இந்த வழக்கில் தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி அமானத்துல்லா கான் தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த தில்லி நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி ஜிதேந்திர சிங், இன்று தீர்ப்பு வழங்கினார்.

அமானத்துல்லா கானுக்கு எதிரான போதுமான ஆதாரம் இருந்தாலும், அவர் மீது வழக்குப் பதிய அனுமதி இல்லை என்று தெரிவித்த நீதிபதி, ஒரு லட்சம் பிணைப் பத்திரத்தை தாக்கல் செய்தவுடன் சிறையில் இருந்து உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டார்.

மேலும், அமலாக்கத்துறை தாக்கல் செய்த 110 பக்கங்கள் கொண்ட துணை குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள மரியம் சித்திக் என்பவருக்கு எதிராகவும் ஆதாரம் இல்லாததால் அவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ட்ரோன்களில் இந்தியாவின் உதிரி பாகங்கள்: உக்ரைன் குற்றச்சாட்டு

கொல்லப்பட்ட ஆர்வலரின் உடலை ஒப்படைக்க மறுக்கும் இஸ்ரேல்! 6 நாள்களாக உண்ணாவிரதத்தில் பெண்கள்!

உத்தராகண்ட்டில் மேக வெடிப்பு: அதி கனமழை, வெள்ளப்பெருக்கில் ராணுவ வீரர்கள் மாயம்!

ஆக. 21 மதுரையில் TVK மாநில மாநாடு: Vijay அறிவிப்பு | செய்திகள் சில வரிகளில் | 05.08.25

அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!

SCROLL FOR NEXT