மக்களவை -
இந்தியா

அதானி விவகாரம்: முதல் நாளே ஒத்திவைப்பு தீர்மானம் தாக்கல் செய்த காங்கிரஸ் எம்பிக்கள்!

அதானி விவகாரத்தை விசாரிக்க கோரி காங்கிரஸ் எம்பிக்கள் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்திருப்பது பற்றி...

DIN

நாடாளுமன்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரத்தை விசாரிக்கக் கோரி அவைத் தலைவருக்கு காங்கிரஸ் எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், அதானி விவகாரத்தை மத்திய அரசுக்கு எதிராக கையில் எடுத்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளனர்.

நாட்டில் 2020 - 2024 காலகட்டத்தில் சூரிய மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்ள சில மாநிலங்களின் அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,200 கோடி) லஞ்சம் கொடுத்ததாக தொழிலதிபா் கெளதம் அதானி உள்ளிட்டோா் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசுத் தரப்பில் சில தினங்களுக்கு முன்னா் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்தக் கோரி மக்களவை உறுப்பினர்கள் கே.சி.வேணுகோபால், மணீஷ் திவாரி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளனர்.

மேலும், தில்லி காற்று மாசுபாடு குறித்து குறுகிய கால விவாதத்தை நடத்தக் கோரி காங்கிரஸ் எம்பி ரஞ்சித் ரஞ்சன், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்துக்கு சிறப்பு நிதி உதவி வழங்குவது குறித்து விவாதிக்கக் கோரி மார்க்சிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டாஸும் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT