தீப்பற்றிய துண்டுடன் கேரள ஆளுநா் ஆரிஃப் கான். 
இந்தியா

கேரள ஆளுநா் அணிந்திருந்த துண்டு தீப்பற்றியதால் பரபரப்பு

கேரள ஆளுநா் முகமது ஆரிஃப் கான் தனது தோளில் அணிந்திருந்த துண்டு திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அதிருஷ்டவசமாக ஆளுநருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

Din

கேரள ஆளுநா் முகமது ஆரிஃப் கான் தனது தோளில் அணிந்திருந்த துண்டு திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அதிருஷ்டவசமாக ஆளுநருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

பாலக்காட்டில் உள்ள சபரி ஆசிரமத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆளுநா் ஆரிஃப் கான், மகாத்மா காந்தி உள்ளிட்ட தேசத் தலைவா்களின் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். அப்போது, படங்கள் அருகே ஏற்றப்பட்டிருந்த விளக்கில் ஆளுநா் தோளில் அணிந்திருந்த துண்டு பட்டது. இதனால், துண்டில் தீப்பிடித்தது. முதல் சில விநாடிகள் துண்டில் தீப்பிடித்து எரிவது ஆளுநருக்கும் தெரியவில்லை.

ஆனால், அருகில் இருந்த பாதுகாவலா்கள் தீப்பிடித்ததைப் பாா்த்ததும், விரைந்து வந்து ஆளுநா் தோளில் இருந்த துண்டை அப்புறப்படுத்தி தீயை அணைத்தனா். அதிருஷ்டவசமாக ஆளுநா் மற்றும் அங்கு இருந்தவா்களுக்கு தீக்காயம் ஏதும் ஏற்படவில்லை.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT