முகப்பு
இந்தியா

காணாமல் போன சிறுமி; சிக்கிய தந்தை!

5 ஆண்டுகளாக தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதால் வீட்டைவிட்டு சிறுமி தப்பியோட்டம்

Updated On : 4 அக்டோபர் 2024, 3:38 pm IST
கோப்புப் படம்
பகிர்:

மும்பையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, வீட்டைவிட்டு தப்பியோடிய சிறுமி அளித்த புகாரில் தந்தை கைது செய்யப்பட்டார்.

மும்பையில் மகாலட்சுமி நகரில் ஒருவர், தனது 17 வயது காணவில்லை என்று தார்தியோ காவல் நிலையத்தில் புதன்கிழமையில் புகார் அளித்திருந்தார். தனது மகள் கடத்தப்பட்டிருப்பதாகக் கூறி, புகாரில் தெரிவித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், மேற்கு ரயில்வே பகுதி அருகே சிறுமி மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, சிறுமியிடம் குற்றப்பிரிவு குழுவினர் விசாரணையில், சிறுமியை அவரது தந்தை, கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகக் கூறியுள்ளார். அதனால்தான், வீட்டைவிட்டு தப்பித்ததாகவும் சிறுமி கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

இதனையடுத்து, சிறுமியின் தந்தை மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments