FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நாசிக்கில் பயிற்சியின்போது குண்டுவெடித்து 2 அக்னிவீரர்கள் பலி

நாசிக்கில் பயிற்சியின்போது குண்டுவெடித்து 2 அக்னிவீரர்கள் பலி

11 அக்டோபர் 2024, 4:20 pm IST
அக்னிவீரர்கள் - பிரதி படம் - Center-Center-Bangalore
பகிர்:

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள பீரங்கி மையத்தில் இன்று குண்டுகளை வெடிக்க வைக்கும் பயிற்சியில் அக்னிவீரர்கள் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக குண்டுவெடித்து 2 வீரர்கள் பலியாகினர்.

வியாழக்கிழமை மதியம் இந்த விபத்து நடந்ததாகக் காவல்துறையினர் தற்போது தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில், அக்னிவீரர்கள் கோஹில் விஷ்வராஜ் சிங் (20), சைஃபத் ஷிட் (21) என்ற இளைஞர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.

துப்பாக்கி மற்றும் குண்டுகளை வைத்து பயிற்சி எடுத்தபோது, திடீரென ஒரு குண்டு வெடித்ததில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது மரணமடைந்ததாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments