முகப்பு
மஞ்சுவிரட்டு (கோப்புப்படம்)
தமிழ்நாடு

மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் 3 பேர் பலி!

காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் 3 பேர் பலியானது தொடர்பாக...

தமிழ்நாடு

மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் 3 பேர் பலி!

காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் 3 பேர் பலியானது தொடர்பாக...

Updated On : 2 மார்ச், 2026 at 11:30 AM
மஞ்சுவிரட்டு (கோப்புப்படம்)
பகிர்:

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் 3 பேர் பலியாகினர்.

அரளிப்பாறையில் பாலதண்டாயுதபாணி கோயில் விழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 500 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

அவிழ்த்து விடப்பட்ட காளைகள் முட்டியதில் மஞ்சுவிரட்டில் பாா்வையாளராக நின்றுகொண்டிருந்த வடமாநிலத்தவர் உள்பட 3 பார்வையாளர்கள் பலியாகினர்.

இதில், ராமநாதன் (23), சுந்தரராஜ் (48), வடமாநில தொழிலாளி உள்ளிட்ட மூவர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து, காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

கோயில் விழாவையொட்டி நடந்த மஞ்சுவிரட்டில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

summary

Three spectators were killed when bulls went after them during a bullfight near Singampunari in Sivaganga district.

முழு கட்டுரையைப் படிக்க →