முகப்பு
தமிழ்நாடு

மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் 3 பேர் பலி!

காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் 3 பேர் பலியானது தொடர்பாக...

Updated On : 2 மார்ச் 2026, 4:59 pm IST
மஞ்சுவிரட்டு (கோப்புப்படம்)
பகிர்:

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் 3 பேர் பலியாகினர்.

அரளிப்பாறையில் பாலதண்டாயுதபாணி கோயில் விழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 500 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

அவிழ்த்து விடப்பட்ட காளைகள் முட்டியதில் மஞ்சுவிரட்டில் பாா்வையாளராக நின்றுகொண்டிருந்த வடமாநிலத்தவர் உள்பட 3 பார்வையாளர்கள் பலியாகினர்.

Advertisement

Advertisement

இதில், ராமநாதன் (23), சுந்தரராஜ் (48), வடமாநில தொழிலாளி உள்ளிட்ட மூவர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து, காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

கோயில் விழாவையொட்டி நடந்த மஞ்சுவிரட்டில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

summary

Three spectators were killed when bulls went after them during a bullfight near Singampunari in Sivaganga district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments