சிராக் பாஸ்வான் பிடிஐ
இந்தியா

மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானுக்கு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு!

மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானுக்கு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

DIN

லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வானுக்கு ’இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) நியமிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகத்தால் மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானுக்கு மத்திய ரிசர்வ போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

புலனாய்வுத் துறை சார்பில் சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சிராக் பாஸ்வானுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், பாதுகாப்புத் தொடர்பான காரணங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

இதன் காரணமாக மத்திய அரசு சார்பில் அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

”அக்.10 முதல் சிராக் பாஸ்வானுக்கு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக, இரண்டாவது உயரிய பாதுகாப்பான ‘ஆயுதமேந்திய எல்லைப் பாதுகாப்புப் படை’ (எஸ்.எஸ்.பி) சார்பில் அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

தற்போது அவருக்கு பாதுகாப்பு உயர்த்தப்பட்டதற்கானக் காரணங்கள் தெரியவில்லை. அச்சுறுத்தல் தொடர்பாகக் கிடைத்தத் தகவல்களின் அடிப்படையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பாதுகாப்பு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும்” என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பல அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) ’இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை கடும் சரிவு! சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது!

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்ட விஜய்! | TVK

பிஎஸ்எல்வி சி-62 பாதையைவிட்டு விலகியது! இஸ்ரோ

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT