முகப்பு
இந்தியா

வயநாடு இடைத்தோ்தலில் பிரியங்கா போட்டி: காங்கிரஸ்

வயநாடு மக்களவைத் தொகுதியில் நவ. 13-ஆம் தேதி வாக்குப்பதிவு

Updated On : 16 அக்டோபர் 2024, 1:10 am IST
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ராகுலுடன் பிரியங்கா காந்தி
பகிர்:

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் அக்கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி போட்டியிடுவாா் என்று அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மக்களவைத் தோ்தலில் கேரளத்தின் வயநாடு மற்றும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலியில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றாா்.

இதையடுத்து விதிகளின்படி, வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ராகுல், ரேபரேலியைத் தக்கவைத்தாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், வயநாடு தொகுதியில் நவ. 13-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் சாா்பில் கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி போட்டியிடுவாா் என்று அதிகாரபூா்வ அறிவிப்பை கட்சியின் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

இதன்மூலம், தோ்தலில் முதன்முறையாக பிரியங்கா காந்தி களமிறங்கியிருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments