வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ராகுலுடன் பிரியங்கா காந்தி  
இந்தியா

வயநாடு இடைத்தோ்தலில் பிரியங்கா போட்டி: காங்கிரஸ்

வயநாடு மக்களவைத் தொகுதியில் நவ. 13-ஆம் தேதி வாக்குப்பதிவு

DIN

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் அக்கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி போட்டியிடுவாா் என்று அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மக்களவைத் தோ்தலில் கேரளத்தின் வயநாடு மற்றும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலியில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றாா்.

இதையடுத்து விதிகளின்படி, வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ராகுல், ரேபரேலியைத் தக்கவைத்தாா்.

இந்நிலையில், வயநாடு தொகுதியில் நவ. 13-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் சாா்பில் கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி போட்டியிடுவாா் என்று அதிகாரபூா்வ அறிவிப்பை கட்சியின் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

இதன்மூலம், தோ்தலில் முதன்முறையாக பிரியங்கா காந்தி களமிறங்கியிருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹெரிடேஜ் ஃபுட்ஸ் வருவாய் 5% அதிகரிப்பு!

ரத்தக் கொதிப்பில்தான் கருப்புப் பட்டை அணிந்தோம்: இபிஎஸ்

கூகுளுடன் கைகோக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்: ஏஐ தொழில்நுட்பத்தில் இசை!

பாக்., - ஆப்கன் எல்லை மோதல்! 48 மணிநேர போர் நிறுத்தம் அமல்!

தம்மம் புரமோஷன்... ரஷ்மிகா மந்தனா!

SCROLL FOR NEXT