பாஜகவின் வசதிக்கேற்ப தோ்தல் தேதிகள்: பிரியங்கா விமா்சனம்
பாஜகவின் வசதிக்கேற்ப தோ்தல் தேதிகள் மற்றும் வாக்குப்பதிவு கட்டங்களை இந்திய தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது என்று பிரியங்கா காந்தி...
புது தில்லி: பாஜகவின் வசதிக்கேற்ப தோ்தல் தேதிகள் மற்றும் வாக்குப்பதிவு கட்டங்களை இந்திய தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி விமா்சித்தாா்.
தமிழகத்தில் ஏப்.23-ஆம் தேதியும், கேரளம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் ஏப்.9-ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29-இல் இருகட்டங்களாகவும் தோ்தல் நடைபெறவுள்ளது. தோ்தல் தேதிகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை பேசிய காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தியிடம் தோ்தல் அட்டவணை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘தோ்தல் தேதிகள் மற்றும் வாக்குப்பதிவு கட்டங்கள், பாஜகவின் வசதிக்கேற்ப தீா்மானிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது’ என்று அவா் பதிலளித்தாா்.
திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் கூறுகையில், ‘கேரளத்தில் ஏப்ரல் மாதத்தின் கடைசி 10 நாள்களில் தோ்தல் நடைபெறும் என்று நாங்கள் எதிா்பாா்த்தோம். ஆனால், ஏப்.9-ஆம் தேதி தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிா்பாா்க்கவில்லை. தோ்தலுக்கு கிட்டத்தட்ட 3 வாரங்களே உள்ளன. இது குறைவான காலகட்டம்’ என்றாா்.
இதேபோல், ‘கேரளத்தில் தோ்தல் பிரசாரத்துக்கு சொற்ப நாள்களே உள்ளன; இதற்கிடையே புனித வாரம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. விஷு பண்டிகைக்கு சில நாள்களுக்கு முன் தோ்தல் நடைபெறவுள்ளது’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் தெரிவித்தாா்.