பிரியங்கா காந்தி 
இந்தியா

இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது: பிரியங்கா

இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக..

இணையதளச் செய்திப் பிரிவு

இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த வாரம் ஏஐ உச்சி மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியா-அமெரிக்க இடையேயான ஒப்பந்தம் சமரசத்தால் செய்யப்பட்டது போன்ற வாசகங்கள் அடங்கிய ஆடைகளை அணிந்து இருந்தனர். போராட்டத்தை ஆரம்பித்த சில விநாடிகளில் தாங்கள் அணிந்திருந்த சட்டையைக் களைந்து எதிர்ப்பு முழக்கமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், இந்தப் போராட்டத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய்பானு சிப் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். கைது நடவடிக்கையை அடுத்து உதய்பானுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பக்கத்தில்,

சத்தியத்திற்கான அமைதியான மற்றும் வன்முறையற்ற எதிர்ப்பு என்பது நமது பெருமைமிக்க பாரம்பரியமாகும். இது மகாத்மா காந்தியிடமிருந்தும் நமது இந்திய மூதாதையர்களிடமிருந்தும் பெறப்பட்டது.

உலகளாவிய அழுத்தத்திற்கு அடிபணிந்து இந்தியாவின் நலன்கள் சமரசம் செய்த பிரதமர் மற்றும் அரசுக்கு எதிராகக் குரல் எழுப்புவது இந்தியர்களின் நலனுக்காகும் என்று அவர் கூறினார்.

மக்களுக்காகக் குரலை உயர்த்தியதற்காக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் வெட்கக்கேடானது.

இளைஞர் காங்கிரஸின் அச்சமற்ற வீரர்களுடன் காங்கிரஸ் கட்சி உறுதியாக நிற்கிறது என்று அவர் கூறினார்.

Congress general secretary Priyanka Gandhi Vadra on Wednesday said the action taken against Youth Congress members for raising the voice of the people is "highly condemnable" and "shameful".

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு முதல்வர் வெளியிட்ட 6 புதிய அறிவிப்புகள்!

கோயில் நிலத்தில் தொழுகை நடத்தியதாக முஸ்லிம் முதியவர் மீது தாக்குதல்!

ஜேஇஇ தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி!

தமிழ்நாட்டில் பாசிச அடிமைக் கூட்டத்தை வீழ்த்துவோம்! - உதயநிதி ஸ்டாலின் உரை!

உள்ளாட்சி அதிகாரப் பகிர்வில் திமுகவுக்கு பிரச்னை இல்லை! காங்கிரஸ் நிர்வாகி

SCROLL FOR NEXT