முகப்பு
இந்தியா

தில்லி விமான நிலையத்தில் பயணிகளிடம் இருந்து 45 ஐபோன்கள் பறிமுதல்

தில்லி விமான நிலையத்தில் பயணிகள் கடத்தி வந்த 45 ஐபோன்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Updated On : 18 அக்டோபர், 2024 at 11:02 AM
பறிமுதல் செய்யப்பட்ட ஐபோன்கள்.
பகிர்:

தில்லி விமான நிலையத்தில் பயணிகள் கடத்தி வந்த 45 ஐபோன்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து தில்லி சுங்கத் துறை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "வாஷிங்டனில் இருந்து தில்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணி ஒருவரிடம் இருந்து ரூ. 44 லட்சம் மதிப்புள்ள 37 ஐபோன் 16 மொபைல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சோப்பு டப்பாக்குள் ரூ. 5.5 கோடி?

மேலும் ஹாங்காங்கில் இருந்து வந்த 4 பயணிகள் 4 பேரிடம் இருந்து 8 ஐபோன் 16 மொபைல்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இதேபோல் இந்த மாத தொடக்கத்தில், சுங்க அதிகாரிகள் வெவ்வேறு சம்பவங்களில் ஐந்து பயணிகளிடமிருந்து 42 ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மொபைல்களை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.