முகப்பு
இந்தியா

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்.. இன்று மட்டும் 15 விமானங்கள்!

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர்கதையாகும் நிலையில், இன்று மட்டும் 15 விமானங்கள் தரையிறக்கப்பட்டன.

Updated On : 19 அக்டோபர், 2024 at 11:03 AM
வெடிகுண்டு மிரட்டல்
பகிர்:

விமானப் பயணங்கள் மற்றும் விமான பயணிகளை அதிகம் அவதிக்குள்ளாக்கியிருக்கும் வெடிகுண்டு மிரட்டல் தொடர்கதையாகும் நிலையில் சனிக்கிழமை மடடும் 15 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலை முதல் சுமார் 15 ஏர் இந்தியா, இண்டிகோ, ஆகாசா ஏர்லைன்ஸ் விமானங்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இண்டிகோ விமான நிறுவனத்தின் ஐந்து சர்வதேச விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அதிகாரிகளுடன் தாங்கள் பணியாற்றி வருவதாகவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் இண்டிகோ அறிவித்துள்ளது.

ஏர் இந்தியா - ஆகாசா விமானங்கள்

ஏர் இந்தியாவின் ஐந்து விமானங்கள், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக தரையிறக்கப்பட்டதாகவும், ஆனால், இதுவரை இந்த தகவலை ஏர் இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஆகாசா ஏர்லைன்ஸ், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சில விமான சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் எத்தனை விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பதை தெரிவிக்கவில்லை. ஐந்து விமானங்கள் தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபோல, துபையிலிருந்து ஜெய்பூர் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுபோல, தொடர்ந்து விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதால் விமான போக்குவரத்து கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.

கடந்த திங்கள்கிழமை முதல், இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்களால் 35 விமானங்கள் அவரசமாக தரையிறக்கப்படுவது, தாமதமாகப் புறப்படுவது போன்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டதாகவும் இதனைத் தடுக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →