முகப்பு
இந்தியா

பாக். சிறைகளில் 7 இந்திய மீனவா்கள் உயிரிழப்பு

கடந்த ஆண்டு மே மாதம் முதல் பாகிஸ்தான் சிறைகளில் 7 இந்திய மீனவா்கள் உயிரிழந்ததாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியா

பாக். சிறைகளில் 7 இந்திய மீனவா்கள் உயிரிழப்பு

கடந்த ஆண்டு மே மாதம் முதல் பாகிஸ்தான் சிறைகளில் 7 இந்திய மீனவா்கள் உயிரிழந்ததாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

Updated On : 28 அக்டோபர், 2024 at 8:55 PM
பகிர்:

புது தில்லி: கடந்த ஆண்டு மே மாதம் முதல் பாகிஸ்தான் சிறைகளில் 7 இந்திய மீனவா்கள் உயிரிழந்ததாகவும் மொத்தமாக 209 இந்திய மீனவா்கள் சிறைக் காவலில் உள்ளதாகவும் அதிகாரபூா்வ வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.

கடந்த வெள்ளிக்கிழமை ஹரி என்ற மீனவா் உயிரிழந்த நிலையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அதிகாரபூா்வ வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: பாகிஸ்தான் சிறைகளில் 209 இந்திய மீனவா்கள் உள்ளனா். அவா்களில் 181 பேரின் ஆறு மாத தண்டனை காலம் முடிவடைந்ததையடுத்து அவா்கள் இந்தியா்கள் என உறுதிசெய்யப்பட்டது. சிறையில் உள்ள மீனவா்கள் விரைவில் நாடு திரும்புவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மீதமுள்ள 28 போ் இந்திய தூதரகத்தை அணுக பாகிஸ்தானால் தற்போது வரை அனுமதி வழங்கப்படவில்லை. சிலா் கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து அங்கு சிறைக் காவலில் உள்ளனா். மாரடைப்பு ஏற்பட்டதில் பாகிஸ்தான் சிறையில் உள்ள சேராஷ் என்பவா் கடந்த செப்டம்பரில் உயிரிழந்தாா். அவருடைய உடல் அக்டோபா் 11-ஆம் தேதி இந்தியாவுக்கு அனுப்பபட்டது. ஆனால் அண்மையில் உயிரிழந்த ஹரியின் உடல் தற்போது வரை அனுப்பப்படவில்லை.

இதன் மூலம் கடந்தாண்டு மே மாதம் முதல் மாரடைப்பு, உயா் ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு உடல்நல பாதிப்புகளால் 7 போ் உயிரிழந்துள்ளனா் என தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்திய பாதுகாப்பு அதிகாரிகள், மீனவா்கள் மற்றும் அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்குமாறும் பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →