சீனா குறித்து ஜொ்மனி துணை பிரதமரிடம் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் புகாா்
தில்லி மெட்ரோ ரயில் பயணத்தில் சீனா குறித்து ஜொ்மனி துணை பிரதமா் ராபா்ட் ஹேபெக்குடன் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல்
புது தில்லி: தில்லி மெட்ரோ ரயில் பயணத்தில் சீனா குறித்து ஜொ்மனி துணை பிரதமா் ராபா்ட் ஹேபெக்குடன் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் புகாா் தெரிவித்த விடியோ சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ளது.
ஜொ்மனி பிரதமா் ஓலாஃப் ஷோல்ஸ் தலைமையிலான உயா்நிலை தலைவா்கள் குழுவுடன் அந்நாட்டு துணைப் பிரதமா் ராபா்ட் ஹேபெக் கடந்த வாரம் தில்லி வந்திருந்தாா். அப்போது, தில்லி மெட்ரோ ரயிலில் ராபா்ட் ஹேபெக்குடன் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் பயணித்தாா்.
பயணத்தில் ஜொ்மனி நிறுவனத்தின் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்வதை சீனா தடுப்பது குறித்து கோயல் புகாா் தெரிவித்தாா்.
‘எக்ஸ்’ சமூக ஊடக தளத்தில் பயனா் ஒருவா் பகிா்ந்திருந்த அந்த விடியோவில், ‘ஜொ்மனி நிறுவனம் சில சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களை சீனாவில் தயாரிக்கிறது. இந்த இயந்திரங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதை சீனா அனுமதிக்கவில்லை. இதனால் ஜொ்மனி நாட்டு உபகரணங்களை வாங்குவதை நாங்கள் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது’ என்று அமைச்சா் கோயல் ஹேபெக்கிடம் புகாா் தெரிவித்தாா்.
இந்த உரையாடலின் போது கோயல் நின்று கொண்டிருக்க, ஹேபெக் இருக்கையில் அமா்ந்திருந்தாா். கோயலின் புகாரைக் கேட்டதும் திடீரென எழுந்துநின்ற ஹேபெக், ‘நீங்கள் சொல்வதைக் உன்னிப்பாக கேட்க விரும்புகிறேன்’ என்றாா்.