தெலங்கானா(கோப்புப்படம்) 
இந்தியா

தெலங்கானாவில் பெய்த கனமழைக்கு 29 பேர் பலி

தெலங்கானாவில் அண்மையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 29 பேர் பலியானதாக மாநில தலைமைச் செயலர் சாந்தி குமாரி இன்று தெரிவித்துள்ளார்.

DIN

தெலங்கானாவில் அண்மையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 29 பேர் பலியானதாக மாநில தலைமைச் செயலர் சாந்தி குமாரி இன்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநில தலைமைச் செயலர் சாந்தி குமாரி கூறியதாவது, ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 3 வரை பதிவான மழையின் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 29 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தலா மூன்று கோடி ரூபாய் விடுவிக்கப்படுகிறது என்றார்.

மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்த விரிவான அறிக்கையை திங்கள்கிழமை பிற்பகலுக்கு முன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும், பலியான 29 பேரின் விவரங்களை அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர்களிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்துவார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தெலங்கானாவில் அண்மையில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்பு ரூ.5,438 கோடி என மாநில அரசு முதற்கட்ட மதிப்பீட்டின்படி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT