முகப்பு
இந்தியா

ஹரியாணா தேர்தல்: இந்தியா கூட்டணியில் முறிவு! ஆம் ஆத்மி தனித்துப் போட்டி

ஹரியாணா தேர்தல்: ஆம் ஆத்மி - காங். கூட்டணி முறிவு!

Updated On : 9 செப்டம்பர், 2024 at 6:25 PM
பகிர்:

ஹரியாணாவில் இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஹரியாணாவில் அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி நடத்தி வந்த பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இதனிடையே, ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி திங்கள்கிழமை(செப். 9)வெளியிட்டது.

காங்கிரஸ் தலைமை, ஆம் ஆத்மி மற்றும் சமாஜவாதி கட்சிகளுடன் இணைந்து, இந்தியா கூட்டணியாக இத்தேர்தலில் போட்டியிட விரும்பியது. இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதில் ஹரியாணா மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில், திங்கள்கிழமை(செப். 9) நடைபெற்ற இறுதிக்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையிலும் இரு கட்சிகளுக்குமிடையே சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் ஆம் ஆத்மி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள இடங்களை விட்டுக்கொடுக்க காங்கிரஸ் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஆம் ஆத்மி காங்கிரஸுடன் கூட்டணியை முறித்துக் கொண்டது.

இதனையடுத்து, விரைவில் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட உள்ளது. மறுபுறம், காங்கிரஸ் மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடத் தயாராக உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →