முகப்பு
இந்தியா

சத்தீஸ்கர்: வெடிமருந்து வைத்திருந்த 8 நக்சல்கள் கைது!

சோதனையில், ஒரு லட்ச ரூபாய் ரொக்கமும், 200 கிராம் வெடிமருந்து உள்பட வெடிபொருள்கள் சிக்கின

Updated On : 14 செப்டம்பர், 2024 at 10:47 AM
கோப்புப் படம்
பகிர்:

சத்தீஸ்கரில் பதுங்கியிருந்த எட்டு நக்சல்கள் கைது செய்யப்பட்டனர்.

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் இருப்பதாக, காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மாவட்ட ரிசர்வ் காவல்துறையினர், மத்திய ரிசர்வ் காவல்துறையினர் மற்றும் பஸ்தர் காவலர்களும் நக்சல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமையில் பைன்பல்லி கிராமத்திற்கு அருகே நக்சல்கள் இருப்பதை அறிந்தவுடன் அங்கு சென்றுள்ளனர். இதனையடுத்து, காவல்துறையினர் வருவதை அறிந்த நக்சல்கள், தப்பிக்க முயற்சித்துள்ளனர்.

இருப்பினும், அவர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்து, கைது செய்தனர். மேலும், அவர்களிடம் சோதனை மேற்கொண்டதில், ஒரு லட்ச ரூபாய் ரொக்கமும், 200 கிராம் வெடிமருந்து உள்பட வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நக்சல்களின் தளபதி முசாகி பாலா, துணைத் தளபதி மட்கம் சன்னு உள்ளிட்ட 8 நக்சலைட்டுகளும் கைது செய்யப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →