முகப்பு
இந்தியா

அனைத்து இந்திய மொழிகளுடனும் ஹிந்திக்கு பிரிக்க முடியாத உறவு உள்ளது: அமித் ஷா

அனைத்து இந்திய மொழிகளுடனும் ஹிந்திக்கு பிரிக்க முடியாத உறவு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Updated On : 14 செப்டம்பர் 2024, 9:36 am IST
அமித் ஷா - Center-Center-Delhi
பகிர்:

அனைத்து இந்திய மொழிகளுடனும் ஹிந்திக்கு பிரிக்க முடியாத உறவு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஹிந்தி அறிவிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அதில், “அனைத்து இந்திய மொழிகளும் நமக்கு பெருமையும் பாரம்பரியமுமானவை. அவற்றை வளப்படுத்தாமல் நாடு முன்னேற முடியாது. அதிகாரப்பூர்வ மொழியான ஹிந்தி அனைத்து இந்திய மொழிகளுடனும் பிரிக்க முடியாத உறவைக் கொண்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

மேலும், “இந்த ஆண்டுடன் பொதுத் தொடர்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஹிந்தி அறிவிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்து இந்திய மொழிகளையும் ஒன்றிணைத்துக் கொண்டு செல்வதற்கும், மேம்பட்ட இந்தியாவின் வளர்ச்சியை நிறைவேற்றுவதற்கும் அதிகாரப்பூர்வ மொழியான ஹிந்தி தொடர்ந்து பங்களிக்குமென்று நான் நம்புகிறேன்” என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments