கஞ்சா தொடர்பான சர்ச்சை பேச்சு... சமாஜ்வாதி எம்.பி. மீது வழக்குப்பதிவு!
கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று மதத்துடன் தொடர்புபடுத்திப் பேசியதாக சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் அப்சல் அன்சாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று மதத்துடன் தொடர்புபடுத்திப் பேசியதாக சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் அப்சல் அன்சாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் காசிபூர் தொகுதி மக்களவை உறுப்பினரான அப்சல் அன்சாரி, கஞ்சாவை பலரும் வெளிப்படையாகப் பயன்படுத்துவதால் அதனை சட்டப்பூர்வமாக்க வேண்டும் எனப் பேசியிருந்தார்.
மேலும், மதம் சார்ந்த பண்டிகைகளில் ’கடவுளின் பிரசாதம்’ மற்றும் ’புனித மூலிகை’ என்ற பெயரில் கஞ்சா பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி கஞ்சா புகைப்பதால் பசி அதிகரிப்பதாகவும், உடல்நலன் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் கூறிய அவர் இதனால் கஞ்சாவை சட்டப்பூர்வமாக அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
கும்பமேளாவில் அதிக அளவில் கஞ்சா பயன்படுத்தப்படுவதாகவும், சிவபெருமானுடன் தொடர்புடைய மற்றொரு போதைப் பொருளான ’பாங்கு’ சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுவது போல கஞ்சாவையும் ஏன் அனுமதிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அவரது கருத்துகள் பல தரப்பிலும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. இதற்கு மதத் தலைவர்கள் பலரும் அவரது கருத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, எம்பி அன்சாரி மீது கோரா பசார் புறக்காவல் நிலைய பொறுப்பாளர் ராஜ்குமார் சுக்லா என்பவரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அன்சாரியின் பேச்சு சட்டரீதியாக மட்டுமின்றி மதரீதியாகவும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.