வெப்ப அலை 
இந்தியா

ஆந்திரம்: 26 மண்டலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை!

மாநிலம் முழுவதும் 26 மண்டலங்களில் வெப்ப அலை எச்சரிக்கை..

DIN

ஆந்திரப் பிரதேச மாநிலம் முழுவதும் இன்று(ஏப்ரல் 1) 26 மண்டலங்களில் வெப்ப அலை வீசும் என அந்த மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக அதிகப்படியான வெய்யில் கொளுத்திவரும் நிலையில், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் இன்று 26 மண்டலங்களில் வெப்பம் கொளுத்தும் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

26 மண்டலங்களில் விஜயநகரம் மற்றும் ஸ்ரீகாகுளம் மாவற்டடங்களில் தலா ஆறு மண்டலங்களும், அல்லூரி சீதாராமராஜுவில் 3 மண்டலங்களும், கிழக்கு கோதாவரியில் ஒன்று, பார்வதிபுரம் மன்யத்தில் 10 மண்டலங்கள் வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை நிர்வாக இயக்குநர் ஆர். கூர்மநாத் தெரிவித்தார்.

நந்தியாலா மாவட்டத்தில் கோஸ்பாடுகவில் 40.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், அதைத் தொடர்ந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள கம்மரசேடுவில் 40.2 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளன. அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள நாகசமுத்திரத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றைய மின்தடை

வேருடன் அகற்றப்பட்ட 100 ஆண்டுகள் பழைமையான ஆலரம் மீண்டும் நடவு

ரேஷன் கடைகளில் பெறப்பட்ட 31,006 எஸ்ஐஆா் படிவங்கள்: அதிகாரிகள் ஆய்வு

பதவி உயா்வு பெற்ற 9 ஆய்வாளா்கள் வேலூா் சரகத்தில் நியமனம்

முட்டை விலை ரூ.6.10 ஆக நீடிப்பு

SCROLL FOR NEXT