அம்பேத்கர் சிலை பிரதிப் படம்
இந்தியா

இன்று அம்பேத்கர் ஜெயந்தி: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை

தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அரசியல் சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரின் 135ஆவது பிறந்த தினத்தை திங்கள்கிழமை கொண்டாட மத்திய அரசு முடிவு

DIN

தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அரசியல் சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரின் 135ஆவது பிறந்த தினத்தை திங்கள்கிழமை (ஏப். 14) கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி நாடாளுமன்ற வளாக புல்வெளியில் அம்பேத்கருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்துவார்கள். திங்கள்கிழமை காலை முதல் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மதியம் வரை மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று மலர் அஞ்சலி செலுத்துவோருக்கு டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை வசதி செய்து தரும் என்றும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்போர் வந்து செல்ல பேருந்து வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

SCROLL FOR NEXT