அம்பேத்கர் சிலை பிரதிப் படம்
இந்தியா

இன்று அம்பேத்கர் ஜெயந்தி: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை

தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அரசியல் சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரின் 135ஆவது பிறந்த தினத்தை திங்கள்கிழமை கொண்டாட மத்திய அரசு முடிவு

DIN

தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அரசியல் சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரின் 135ஆவது பிறந்த தினத்தை திங்கள்கிழமை (ஏப். 14) கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி நாடாளுமன்ற வளாக புல்வெளியில் அம்பேத்கருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்துவார்கள். திங்கள்கிழமை காலை முதல் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மதியம் வரை மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று மலர் அஞ்சலி செலுத்துவோருக்கு டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை வசதி செய்து தரும் என்றும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்போர் வந்து செல்ல பேருந்து வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

SCROLL FOR NEXT