கோப்புப் படம் 
இந்தியா

தெலங்கானாவில் 14 மாவோயிஸ்டுகள் சரண்!

தெலங்கானாவில் 14 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளதைப் பற்றி...

DIN

தெலங்கானாவில் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த 14 பேர் காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர்.

மாவோயிஸ்ட் அமைப்பின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 14 உறுப்பினர்கள் தெலங்கானா காவல் துறை உயர் அதிகாரி சந்திரசேகர் ரெட்டியின் முன்னிலையில் இன்று (ஏப்.24) சரணடைந்துள்ளதாக வாராங்கல் காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரணடையும் மாவோயிஸ்டுகளுக்காக அரசு கொண்டு வந்துள்ள மறுவாழ்வுத் திட்டங்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ள நலத்திட்டங்களைப் பற்றி அறிந்த மாவோயிஸ்டுகள் கிளர்ச்சியைக் கைவிட்டு அரசிடம் சரணடைந்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நிகழாண்டில் (2025) பல்வேறு படைகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் தெலங்கானா காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர். மேலும், 12 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், சரண்டைந்துள்ள பெரும்பாலான மாவோயிஸ்டுகள் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:பாதுகாப்புத் தோல்வி! பஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கப் போவது யார்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT