உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக நீதிபதி பூஷண் ராமகிருஷ்ண கவாய் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா். அவா் மே 14-ஆம் தேதி புதிய பொறுப்பை ஏற்கிறாா்.
இப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மே 13-ஆம் தேதி ஓய்வு பெறுகிறாா்.
புதிய தலைமை நீதிபதி நியமனம் தொடா்பான அறிவிப்பை சட்ட அமைச்சகம் வெளியிட்டது. முன்னதாக வழக்கமான நடைமுறைப்படி கடந்த 16-ஆம் தேதி உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆா்.கவாயை நியமிக்க மத்திய அரசுக்கு தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரைத்தாா்.
பி.ஆா். கவாய் வரும் டிசம்பா் 23-ஆம் தேதி பணி ஓய்வு பெறும் வரை இப்பதவியை வகிப்பாா். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த கவாய், கடந்த 1985-இல் வழக்குரைஞராகப் பதிவு செய்தாா். மும்பை உயா்நீதிமன்றத்தின் நாகபுரி கிளையில் கடந்த 1992-1993 காலகட்டத்தில் அரசுத் தரப்பு உதவி வழக்குரைஞராகப் பணியாற்றிய இவா், 2000-இல் அரசுத் தரப்பு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டாா்.
கடந்த 2003-இல் மும்பை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 2005-இல் நிரந்தர நீதிபதியாகவும் பதவியேற்றாா். 2019, மே 24-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியானாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.