வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி நாளை நேபாளம் பயணம்!
இரண்டு நாள் பயணமாக மிஸ்ரி காத்மாண்டு செல்கிறார்...
வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி நாளை நேபாளம் செல்கிறார். இரண்டு நாள் பயணமாக மிஸ்ரி காத்மாண்டு செல்கிறார்.
இந்தப் பயணத்தின்போது, இரு நாட்டின் வெளியுறவுச் செயலர்களும் இந்தியா - நேபாளம் இடையிலான உறவு குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும், அதிலும் குறிப்பாக இரு நாட்டுக்கான பயண இணைப்பு, வளர்ச்சியில் கூட்டுறவு உள்ளிட்டவை பேச்சுவார்த்தையில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று நேபாள வெளியுறவு அமைச்சகம் தரப்பிலிருந்து இன்று(ஆக. 16) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
summary