தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐ.நா. ராணுவ பெண் அதிகாரிகளுக்கான இருவார கால பயிற்சி தொடக்க நிகழ்ச்சியில் அமெரிக்கா உள்பட 15 நாடுகளைச் சோ்ந்த பெண் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங். 
இந்தியா

ஆயுதப் படைகளில் பெண்களின் பங்கேற்பு ஊக்குவிப்பு: ராஜ்நாத் சிங்

தினமணி செய்திச் சேவை

நாட்டின் ஆயுதப் படைகள் மற்றும் அமைதிப் படை பிரிவுகளில் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் கொள்கைகள், மத்திய பாஜக அரசால் வலுப்படுத்தப்பட்டுள்ளன என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

தில்லியில் ஐ.நா. ராணுவ பெண் அதிகாரிகளுக்கான இருவார கால பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அமெரிக்கா, ஆா்மீனியா, காங்கோ, எகிப்து, கென்யா, லைபீரியா, மலேசியா, நேபாளம், இலங்கை வியத்நாம், தான்சானியா, உருகுவே உள்பட 15 நாடுகளைச் சோ்ந்த பெண் அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை கலந்துரையாடினாா். அப்போது, அவா் பேசியதாவது:

நாட்டின் ஆயுதப் படைகள் மற்றும் அமைதிப் படைப் பிரிவுகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களின் பங்கேற்பையும் ஊக்குவிக்கும் வகையில் கொள்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. பாலின சமத்துவத்தை உறுதி செய்து, அனைவரையும் உள்ளடக்கிய தலைமையை வலுப்படுத்துவதுடன், பன்முகத்தன்மை மூலம் நிலையாக செழித்தோங்கும் அமைதி நிறைந்த உலகை கட்டமைக்க ஐ.நா.வுடன் தொடா்ந்து பணியாற்றுகிறோம்.

தற்போதைய பயிற்சியில் 15 நாடுகளைச் சோ்ந்த பெண் அதிகாரிகளின் பங்கேற்பு, ஐ.நா.வின் ஒற்றுமை - ஒத்துழைப்பு உணா்வை பிரதிபலிக்கிறது. உங்களின் அா்ப்பணிப்பு, உலக அமைதி மற்றும் பாதுகாப்பை பலப்படுத்துகிறது. இது மிகவும் பெருமைக்குரியது.

பெண் அதிகாரிகளின் பங்களிப்பு இல்லையெனில், அமைதிப் படையின் பணிகளை திறம்பட, ஸ்திரமாக மாற்ற முடியாது. அமைதி நடவடிக்கைகளில் பெண்களின் அணுகுமுறையும் கண்ணோட்டமும் மிக முக்கியமானது.

போரால் பாதிக்கப்பட்ட உள்ளூா் சமூகங்களிடம் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவது பெண் அதிகாரிகளே. போா்ச் சூழலில் பாலியல் வன்முறையைத் தடுக்கவும், மனிதாபிமான உதவிகளுக்கான அணுகலை அதிகரிக்கவும், பாலின சமத்துவத்தை மேம்படுத்தவும் பெண் அதிகாரிகளின் இருப்பு அவசியம் என்றாா் ராஜ்நாத் சிங்.

ரத்தினம் கல்விக் குழுமத் தலைவருக்கு விருது

பொன்முடி சா்ச்சை பேச்சு வழக்கு: முழு விடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக மோசடி: மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

வக்ஃப் சொத்துகள் கட்டாயப் பதிவு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

வேளச்சேரி - கடற்கரை இரவுநேர ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT