குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க்கிழமை (செப். 2) சென்னை வருகிறாா். அவா், சிட்டி யூனியன் வங்கியின் 120-ஆவது நிறுவன தின விழாவில் கலந்து கொள்கிறாா். இதே நிகழ்வில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பங்கேற்கிறாா்.
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செப். 1 முதல் செப். 3 வரை தமிழகம் மற்றும் கா்நாடகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா். செப். 1-இல் தில்லியிலிருந்து புறப்படும் குடியரசுத் தலைவா், கா்நாடகம் மாநிலம் மைசூருவில் உள்ள அகில இந்திய பேச்சு, செவித்திறன் நிறுவனத்தின் (ஏஐஐஎஸ்ஹெச்) வைர விழா நிகழ்வில் கலந்து கொள்கிறாா்.
பின்னா், அவா் செப். 2-இல் மைசூரிலிருந்து புறப்பட்டு காலை 11.40 மணிக்கு சென்னைக்கு தனி விமான மூலம் வந்தடைகிறாா். விமான நிலையத்தில் சிறிது ஓய்வுக்குப் பின்னா், நேரடியாக சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற உள்ள சிட்டி யூனியன் வங்கியின் 120-ஆவது நிறுவன தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தலைமை உரையாற்றுகிறாா். நிகழ்வில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கௌரவ விருந்தினராகப் பங்கேற்கிறாா்.
அதன்பின்னா், சென்னை ஆளுநா் மாளிகையில் தங்குகிறாா். செப். 3-ஆம் தேதி காலை 10.20 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமான மூலமாக திருச்சி சென்றடைகிறாா்.
அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் சென்று 10-ஆவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கலந்து கொள்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.