ஆம் ஆத்மி Vs பாஜக! பிரச்னைகளைப் பட்டியலிட்ட தில்லி அமைச்சர்!
தில்லியில் ஆம் ஆத்மியால் உருவாக்கப்பட்ட பிரச்னைகளை பாஜக தீர்த்து வருவதாக மாநில அமைச்சர் பேச்சு
தில்லியில் முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான பாஜக ஆட்சியின் நடவடிக்கைகள் குறித்து மாநில அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா விளக்கமளித்துள்ளார்.
தில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாநில அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, ``கடந்த 10 ஆண்டுகளாக, ஆம் ஆத்மி கட்சியால் உருவாக்கப்பட்ட பிரச்னைகளை நாங்களும் தில்லி மக்களும் எதிர்கொண்டோம். இந்தப் பிரச்னைகளைத் தீர்க்கவே ரேகா குப்தா அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
விதிகளை மீறும் எந்தவொரு அரசும் அல்லது தனியார் நிறுவனத்திற்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இதுவரை, காற்றின் தரம் தொடர்பான 1,750 ஆய்வுகள் நடத்தப்பட்டு, 556 அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 48 கட்டுமான தளங்கள் மூடப்பட்டு, ரூ. 7 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களில், சாலை தொடர்பான 230 ஆய்வுகளில் ரூ. 1 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் (PUCC) என கடந்தாண்டு 4,33,000 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டன. ஆனால், இந்தாண்டில் இருமடங்காக 7,97,000 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டன.
அதுமட்டுமின்றி, தூசி கட்டுப்பாட்டு மீறல்கள் 536 வழக்குகளிலும், திறந்தவெளியில் எரிப்பு என 633 வழக்குகளிலும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: விமான சேவை பாதிப்பு! கட்டணங்களை திருப்பி அனுப்ப மத்திய அரசு கெடு!
Delhi: Strict action is being taken against any government or private entity violating rules says Minister Manjinder Singh Sirsa
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.