தில்லியில் நிலவி வரும் கடும் பனிமூட்டத்தால் விமானப் போக்குவரத்து பாதிப்பு ANI
இந்தியா

தில்லியில் கடும் பனிமூட்டம்! 126 விமானங்களின் போக்குவரத்து பாதிப்பு!

தில்லியில் பனிமூட்டத்தால் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியில், கடுமையான பனிமூட்டம் நிலவி வருவதால் 100-க்கும் அதிகமான விமானங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் நிலவி வரும் கடுமையான பனிமூட்டத்தால் உருவான மோசமான தெரிவுநிலையால் இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று (டிச. 16) விமானப் போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், சில விமானங்களின் பயணங்கள் தாமதப்படுத்தப்பட்டுள்ளன.

தில்லி விமான நிலையத்துக்கு வரவிருந்த 77 விமானங்கள் மற்றும் அங்கிருந்து புறப்பட வேண்டிய 49 விமானங்களின் பயணம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, வானிலை சீரடைந்து வருவதால், சில விமானங்கள் மட்டும் இயக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த, தகவல்களைப் பெறுவதற்கு பயணிகள் அவர்களது விமான நிறுவனங்களைத் தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

முன்னதாக, தலைநகர் தில்லியில் காற்றுமாசுப்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மதுராவில் பேருந்துகள் தீ விபத்து: 13 பேர் பலி, 35 பேர் காயம்

In Delhi, more than 100 flights have been affected due to severe fog conditions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காவிரியில் தொடரும் ஆபத்து பயணம் காத்திருப்பில் ஒட்டனூா்- கோட்டையூா் பால அறிவிப்பு!

பேருந்தை மறித்து கிராமமக்கள் போராட்டம்

நாகை நகராட்சியை கண்டித்து தவெக ஆா்ப்பாட்டம்

நாரைக்கிணறு பகுதியில் மக்கள் சந்திப்புக் கூட்டம்: அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்பு

முன்னாள் படை வீரா் நல அலுவலக வாகனம் டிச.30-இல் ஏலம்

SCROLL FOR NEXT