சென்னையில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.
கடந்த சில நாள்களாக சென்னையில் பனிமூட்டம் நிலவிவரும் நிலையில், இன்று(பிப். 8) அதிகாலை முதல் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது.
விடிந்த பிறகும் பனி விலகாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
இதனால், சென்னைக்கு வரும் புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.
திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு வரும் மின்சார ரயில்கள் 30 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டது.
மேலும், சென்னைக்கு வரும் கும்மிடிப்பூண்டி மற்றும் சூளூர்பேட்டை மின்சார ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டது.
இன்று அதிகாலை முதல் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் வாகன ஓட்டுநர்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.