கோப்புப் படம் 
இந்தியா

பாக். வானில் இந்திய விமானங்கள் பறக்கத் தடை நீட்டிப்பு!

பாகிஸ்தான் வானில் இந்திய விமானங்கள் பறப்பதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தான் வானில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை மீண்டும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வான்வழிப் பாதையை இந்திய விமானங்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டது. இதேபோல், இந்திய வானில் பறப்பதற்கு பாகிஸ்தானின் விமானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் வான்வழியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையானது வரும் டிச.24 ஆம் தேதி காலாவதியாகின்றது.

இதையடுத்து, இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையானது வரும் 2026 ஆம் ஆண்டு ஜன.23 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்படுவதாக, பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்திய நிறுவனங்களுக்குச் சொந்தமான விமானங்கள் மற்றும் இந்திய ராணுவ விமானங்கள் உள்பட இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து விமானங்கள் மீதும் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில், கடந்த மே மாதம் நடைபெற்ற 4 நாள் மோதல்களால் விதிக்கப்பட்ட இந்தத் தடையை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து நீட்டித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அகமதாபாத்தில் 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

The ban on Indian aircraft flying in Pakistani airspace has been extended for another month, it has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கும் புதிய படத்தின் டீசர்!

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!

”அருவருக்கத்தக்க பொய் பிரசாரத்தை திமுக செய்துவருகிறது!” TVK அருண்ராஜ்

அணுசக்தி துறையில் தனியார் பங்களிப்புக்கு அனுமதி: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்! எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு!

ஏலம் முடிந்தும் அழுதுகொண்டிருந்தேன்... சிஎஸ்கேவில் தேர்வான 19 வயது வீரரின் பேட்டி!

SCROLL FOR NEXT